உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு – பட்ஜெட் குறித்து முதல்வர் கருத்து!

mk stalin

2024-24ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை அந்த துறையை சார்ந்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், பயிர் காப்பீட்டு திட்டம், வேளாண் இயந்திரம் வாங்க விவசாயிகளுக்கு கூடுதல் மானியம், கருப்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியானது. இதுபோன்று, உற்பத்தி திறனை மேம்படுத்துதல், இழப்பீடு, நிவாரணம் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளும் இடம்பெற்றது. … Read more

வேளாண் பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை… எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் விமர்சனம்!

EDAPPADI PALANISWAMI (2)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று 2024-25ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, நான்காவது முறையாக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வைத்தார். இந்த வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டால் … Read more

வேளாண் பட்ஜெட்… பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடிக்கு இலக்கு..!

Panneerselvam

சட்டப்பேரவையில் 4-வது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்று காலை 10 மணிக்கு தமிழக அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது” 2022-23-ஆம் நிதியாண்டில் பயிர் கடனாக 13,442 கோடி ரூபாய் 17 லட்சத்து 44 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023 -24 நிதியாண்டில் 16,500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 13 ஆயிரத்து 600 கோடி … Read more

வேளாண் தொழில் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம்!

graduates

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024 -25ம் நிதியாண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சுமார் 1 மணி நேரம் 57 நிமிடங்கள் பட்ஜெட்டை வாசித்து முடித்தார். இந்த வேளாண் பட்ஜெட்டில் வேளாண் சார்ந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு, பல்வேறு அரிப்புகள் மற்றும் மானியம் உள்ளிட்ட சலுகைகள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில், வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு ரூ.1 மானியம் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்தார். … Read more

10 வேளாண் விளைப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு..!

Flame lily

10 வேளாண் விளைப்பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது  பேசிய அமைச்சரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், “புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்துவதால் அவற்றின் தேவை ஏற்றுமதி அளவு  அதிகரிக்கும். மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 50 லட்சம் நிதி ஒதுக்கீடு..! எனவே நமது மண்ணின் அடையாளங்களான மாநிலத்தின் தனித்துவமான 25 வேளாண் … Read more

விவசாயிகளே! பயிர் காப்பீடு, நெல் கொள்முதல், கரும்பு சாகுபடி… பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

agricultural budget 2024

தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டிற்கான வேளாண்துறைக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதில், பல்வேறு அறிவிப்புகள், விவசாயிகளுக்கு மானியம், நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2023-2024 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடியும், சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ.12.40 கோடியும் ஒதுக்கீடு … Read more

மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 50 லட்சம் நிதி ஒதுக்கீடு..!

Nel Jayaraman

சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-25-ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை  தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர் “ஆடாதொடா,நொச்சி போன்ற தாவர வகைகளை தரிசு நிலங்களிலும், வயல் பரப்புகளிலும்  நடவு செய்திட  ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.  பழங்காலத்தில் நம் தமிழர்கள் நல்ல உணவு பழக்க வழக்கங்களை கொண்டிருந்தன. இதனால் நல்வாழ் வாழ்ந்தனர். இதனை ஊக்குவிக்கும் விதமாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவல்ல  சீவன் சம்பா போன்ற மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய நெல் ரகங்கள் 2024-25 … Read more

2024-25 தமிழக வேளாண் பட்ஜெட்… அரசின் முக்கிய அறிவிப்புகள்.!

TNAgriBudget2024

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் படஜெட் உரையை வாசித்து வருகிறார். இந்த வேளாண் பட்ஜெட் குறித்த தகவல்களை கீழே காணலாம். தமிழக வேளாண் பட்ஜெட் பயிர் காப்பீடு குறித்த முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு … Read more

விரைவில் 2 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம்! பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு!

farmers

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். அப்போது, தமிழ்நாட்டில் 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேரைவையில் அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாட்டில் கடந்த 2022-23ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழை, வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை உள்ளிட்ட இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.380.40 கோடி … Read more

2 லட்சம் விவசாயிகள் பலன்பெற மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி..!

Panneerselvam

சட்டப்பேரவையில்2024-25-ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர்” வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்திட தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.  பயிர் வகைகள், கொப்பரை தேங்காய் ஆகியவையும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செயல்படுவதால் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு கரும்பிற்கு ஒரு மெட்ரிக் டன் ஊக்கத்தொகையாக 195 ரூபாய் விதம் 260 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்திட ஏதுவாக … Read more