#Breaking:மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு -சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை:மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலத்தின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம், வருமானத்துக்கு அதிக்காகமாக சொத்து சேர்த்ததாக கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி  அவரது வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும், 11 கிலோ தங்கமும்,சந்தன மரத்தில் இருந்து செய்யப்பட்ட பொருட்கள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் … Read more

வெங்கடாசலம் மரணத்தில் மர்மம்..! நேர்மையாக செயல்படுங்கள்..! – ஈபிஎஸ் அறிக்கை

வெங்கடாசலம் மரணத்தில், மர்மம் இருப்பதாகவும், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து, நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து ஈபிஸ்அறிக்கை. முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மரணத்தில், மர்மம் இருப்பதாகவும், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து, நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து ஈபிஸ்அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த திமுக அரசு, எப்படி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்புற … Read more

#BREAKING : மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு புதிய தலைவர் நியமனம்..!

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாஹுவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி, தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலம் அவர்கள் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி அவரது வீட்டில் பணம், தங்கம் மற்றும் சந்தன பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வெங்கடாசலம் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய … Read more

#Breaking:மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் மேலும் 3 கிலோ தங்கம் – லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல்..!

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திட்டமிட்டுள்ளனர். 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வரும் வெங்கடாசலம் அவர்களின், இல்லம் மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கடாசலம் அவர்கள் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி,அவரது வீட்டில் இருந்து 13.5 லட்சம் பணம்,எட்டு … Read more

#BREAKING : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…!

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வரும் வெங்கடாசலம் அவர்களின், இல்லம் மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 2019-ஆம் ஆண்டு முதல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வரும் வெங்கடாசலம் அவர்களின், இல்லம் மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கடாசலம் அவர்கள் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், … Read more