மாணவி சத்யாவின் தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்..! நடந்தது என்ன…?

மாணவி சத்யாவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.   சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா (20) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்ட காரணத்தால், சதீஷ்  மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, சத்யாவை ரயில் முன் தள்ளி … Read more

அதிர்ச்சி சம்பவம்…பாலியல் ரீதியான உறவில் ஈடுபட மறுத்த 19 வயது மாணவி;சக மாணவர்களால் கொலை!

ராஜஸ்தான்:சக மாணவர்களுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட மறுத்த 19 வயது மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை. ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும்  19 வயது கல்லூரி மாணவியை தங்களுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட மறுத்ததற்காக அவரது வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் விஷம் கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்களுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு மாணவர்கள் வற்புறுத்திய நிலையில்,அதனை மாணவி மறுத்ததால்,அவருக்கு விஷம் கொடுத்துள்ளனர்.இதனால் … Read more

இரு குழந்தைகளுக்கு உப்புமாவில் விஷம் வைத்து கொடுத்த தாய் – ஒன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு..!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கட்சி எனும் பகுதியை சேர்ந்த கார்த்திகா எனும் 21 வயது பெண்ணுக்கு சஞ்சனா எனும் மூன்றரை வயது பெண் குழந்தையும், சரண் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளது. திடீரென குழந்தை சரண் மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா கூறவே, அருகிலிருந்தவர்கள் குழந்தையாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் விஷம் … Read more

13 கோடி மதிப்புள்ள பாம்பு விஷத்துடன் மேற்கு வங்க நபர் கைது …!

மேற்கு வங்கத்தை சேர்ந்த நபர் ஒருவர் 13 கோடி மதிப்புள்ள பாம்பு விஷத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள தக்ஷின் தினாஜ்பூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கோருமாரா எனும் தேசிய பூங்காவில் வைத்து மூன்று ஜாடி பாம்பு விஷத்துடன் பிடிபட்டுள்ளார். இந்த பாம்பு விஷம் சுமார் 13 கோடி மதிப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த பாம்பு விஷம் சீனாவுக்கு கடத்துவதாக அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட … Read more

அதிர்ச்சி : கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை!

கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் நாய்கள், குரங்குகள், மயில்கள் ஆகிய விலங்குகளுக்கு எதிரான வதை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள  ஷிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினருக்கும், விலங்கினங்கள் மீட்பு படைக்கும் கிராம மக்கள் … Read more

20 நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொலை – உத்தரப்பிரதேசம்..!

உத்தரப்பிரதேசத்தில் உணவில் விஷம் கலந்து கொடுத்து 20 நாய்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகல் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சாப்பிடும் ரொட்டிகளில் விஷம் கலந்து நாய்களுக்கு கொடுத்துள்ளனர். இதனால் அவற்றை சாப்பிட்ட 20 நாய்கள் தற்போது உயிரிழந்துள்ளது. மேலும், இது குறித்து பசௌரா கிராமத்தின் தலைவர் சுக்நந்தன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் நாய்களுக்கு உணவில் விஷம் … Read more

மேற்குவங்கம்: விஷம் குடித்து மயங்கி விழும் பெண் ஆசிரியர்களின் அதிர்ச்சி வீடியோ..!

மேற்குவங்கத்தில் பெண் ஆசிரியர்கள் விஷம் குடித்து மயங்கி விழும் அதிர்ச்சியான காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. செவ்வாய்க்கிழமை அன்று உப்பு ஏரி பகுதியில் உள்ள பிகாஷ் பவனில் இருக்கும்  மாநில அரசின் கல்வித் துறை தலைமையகத்திற்கு வெளியே ஐந்து பெண் ஆசிரியர்கள் விஷம் குடித்துள்ளனர். அப்போது விஷம் அருந்திய ஆசிரியர்களில் ஒருவரின் வாயில் இருந்து நுரை வரத்தொடங்கியுள்ளது. அந்நேரத்தில் அந்த ஆசிரியர் தெரிவித்ததாவது, மாதம் ரூ.10,000 மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும், இடமாற்றங்களுடன் இவ்வளவு குறைந்த தொகையில் … Read more

சென்னை டாக்டர் விஷம் குடித்து தற்கொலை..!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர்கள் மனோகரன்-கிருஷ்ணவேணி தம்பதியினர். இவர்கள் இருவருமே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது மூத்த மகன் சிவநாதன் (வயது 25). இவர் சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்று அங்கேயே பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவில் மானாமதுரைக்கு வந்து தனது பெற்றோர்களை சந்தித்துள்ளார். அதன் பின்னர் அவர் விஷம் குடித்துள்ளதாக அவரது பெற்றோரிடம் … Read more

தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களில் நீரில் கலந்த வி‌ஷம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!

அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் இந்தியாவில் நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆறுகள், கிணறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் இந்தியாவில் உள்ள 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனியா வி‌ஷம் பரவி கிடப்பது கண்டறியப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 324 கிணறுகளில் உள்ள தண்ணீரில் ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில் மிக அதிக அளவில் யுரேனிய வி‌ஷம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோ … Read more