கரூரை தொடர்ந்து விழுப்புரத்தில் நச்சுவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..!

விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் சேகர் என்பவரின் மளிகை கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு.  விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் சேகர் என்பவரின் மளிகை கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது மணிகண்டன், ஐயப்பன் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை வேர்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக கரூரில்  கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது 4 தொழிலாளர்கள் விஷவாயுத் தாக்கி உயிரிழந்தது … Read more

4 பேர் உயிரிழப்பு.! 15 நாட்களுக்குள் கட்டடத்தை இடிக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு.!

கட்டடம் கட்டும் போது செப்டிக் டேங்கில் இருந்து விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த சம்பந்தப்பட்ட கட்டடம் முழுதாக இடிக்க கரூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.    கரூர் மாவட்டம் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்ற வழக்கறிஞர் வீடு கட்டி வந்துள்ளார். அப்போது செப்டிக் டேங்க் கட்டி முடிக்கப்பட்டு , அதன் உள்ளே இருக்கும் சவுக்கு கம்புகளை அவிழ்க்க, உள்ளே சென்ற தொழிலாளர்கள் 4 பேர் உள்ளே விஷ … Read more

கரூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்வு..!

கரூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.  கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். செல்லாண்டிபாளையம் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும்போது கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொழிலாளி கோபால் என்பவர் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் … Read more

காஞ்சிபுரம் : சொகுசு விடுதியில் 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு.!

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சொகுசு விடுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்திகரிக்கும் போது 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் பிரபல சொகுசு விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய 3 தொழிலாளர்கள் வந்துள்ளனர் அவர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போதே விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளனர். அதன் பின்னர் உயிரிழந்துள்ளானர். இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் வந்து, கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த 3 தொழிலாளர்களின் … Read more

#BREAKING: சென்னையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு!

சென்னையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு. சென்னை திருமுல்லைவாயிலில் தரைத்தளத்தில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். விஷ வாயு தாக்கி வீட்டின் உரிமையாளர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். சிவசக்திநகரில் சம்புவிலிருந்து விஷ வாயு தாக்கியதில் பிரமோத், பிரேம்குமார், தந்தை பிரதீப் குமார் ஆகியோர் இறந்தனர். மேலும் தரைத்தள தண்ணீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிருக்கு போராடிய … Read more

திருப்பூரில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு!

திருப்பூரில் சாயப்பட்டரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு. திருப்பூர் வீரபாண்டி அருகே சாயப்பட்டரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தினேஷ், வடிவேல் என்ற 2 பேர் உயிரிழந்தனர். விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் 2 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.