“தொடர்ந்து உழைக்க வேண்டும்;அப்போது தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும்”: அண்ணாமலை…!

தொடர்ந்து உழைத்தால் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக திமுக,அதிமுக கட்சிகள் முன்னதாக ஆலோசனைக் கூட்டம் நடத்தின. அந்த வகையில்,பாஜக மாவட்ட தலைவர்களுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது.இதில்,அனைத்து மாவட்ட தலைவர்களும், மாநில நிர்வாகிகளும் பங்கேற்றனர். … Read more