ஒரு லிட்டர் கோமியம் ரூ.4 மட்டும்தான்..! சத்தீஸ்கர் அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஜூலை 28ஆம் தேதி முதல் கோமியம் கொள்முதல் செய்யப்படும் சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது.  சத்தீஸ்கரில் அம்மாநில அரசு கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ஜூலை 28ஆம் தேதி முதல் கோமியம் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ளது.  கால்நடை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய ப்படும் கோமியம் ஒரு லிட்டர் ரூபாய் 4-க்கு விற்கப்படும் என்றும், இதன் மூலம் கால்நடை விவசாயிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் என்றும் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

#BREAKING: இலவச ஆடு,மாடு வழங்கும் திட்டம் தொடரும் -முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச ஆடு,மாடு வழங்கும் திட்டம் தொடரும் என அறிவித்தார்.  தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று 6-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றை தினம் கால்நடை, வேளாண் மற்றும் மீன்வள ஆகிய துறைகளின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச ஆடு,மாடு வழங்கும் திட்டம் தொடரும் என அறிவித்தார்.