அரசு மருத்துவமனைகள் எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன – அண்ணாமலை

annamalai

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் மருத்துவர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், அரை மணி நேரத்திற்கும் … Read more

தவறான நிர்வாகம், பொய்கள் இதுதான் திமுக! – அண்ணாமலை

இதயம் இல்லாத திமுக அரசு “நன்றாக வேலை செய்துள்ளோம்” என்று தன் முதுகில் தட்டிக் கொள்கிறது என அண்ணாமலை ட்வீட்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மழை வெள்ள பாதிப்பு குறித்து தனது ட்விட்டர் வீடியோ ஒன்றை பதிவிட்டு, திமுக அரசு பொய் சொல்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘“தவறான நிர்வாகம் & பொய்கள் -இதுவே திமுக!” மழைக்கு முன் போதிய முன்னேற்பாடுகள் செய்யாததால் சாமானிய மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு … Read more

தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் பந்த் தற்காலிகமாக ஒத்திவைப்பு.! பாஜக அறிவிப்பு.!

கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற இருந்த பந்த் ஒத்திவைக்கப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது.  கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, திமுக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து பாஜக சார்பில் அக்டோபர் 31ஆம் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பந்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதில் பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பு பாஜக பந்திற்கு யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. அந்த பாஜக செயற்குழு உறுப்பினர் அறிவித்த பந்திற்கு … Read more

உக்ரேனில் 800 இந்திய மாணவர்களை மீட்ட கொல்கத்தா பெண் விமானி..!

கொல்கத்தாவை சேர்ந்த 24 வயது பெண் விமானி,உக்ரைன் போருக்கு மத்தியில் 800 மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி  தொடங்கி 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களில் 20,000 ற்கும் மேற்பட்டவர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த 24 வயதான பெண் விமானி “மஹாஸ்வேதா சக்ரவர்த்தி”உக்ரைன் ,போலந்து,ஹங்கேரி எல்லையிலிருந்து 800 மாணவர்களை மீட்டு … Read more

“நிர்வாக சீர்கேடுடைய திமுக அரசு;அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்யும் திருமாவளவன் ,பாலகிருஷ்ணன்-அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை:விசிக தலைவர் திருமாவளவன்,கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் சட்டமேதை அம்பேத்கரின் 65-வது நினைவு நாளான இன்று  சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பட்டியலின சமுதாய தலைவர் பொன்பாரதி உள்ளிட்ட பாஜகவினர் மரியாதை மேளதாளங்கள் முழங்க, தீச்சுடர் ஏந்தி,நடந்து ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினார்கள். இதனையடுத்து,செய்தியாளர்களுக்கு … Read more

அதிர்ச்சி…பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம்!

சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்துள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம்,பாஜகவில் இணைந்துள்ளார்.திருப்பூரில் இன்று நடைபெற்று வரும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் முன்னிலையில்,மாணிக்கம் அவர்கள் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அதிமுக வழிகாட்டுதல் குழுவை விரிவிப்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு பேசி வரும் நிலையில்,தமிழக முன்னாள் முதல்வர் … Read more

“பாஜக அரசின் பேரழிவுகளை மூடி மறைக்க முடியாது”- காங்.கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

தமிழகம்:நாடு முழுவதும் 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதைக் கொண்டாடுகிற வகையில் பாஜக ஈடுபட்டு வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கொரோனா பேரழிவை மூடி மறைக்கவே 100 கோடி தடுப்பூசிகள் போட்டதைக் கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். இத்தகைய பிரச்சாரங்களின் மூலமாக பாஜக அரசின் இமாலயத் தவறுகளை மூடி மறைத்துவிட முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் … Read more

“ஆட்சிக்கு வந்த 6 மாத காலத்திலேயே திமுக மீது மக்களுக்கு வெறுப்பு;சென்னைக்கு மாஸ்டர் பிளான்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

சென்னை வெள்ளத்தை திமுக அரசு கையாண்ட விதம் தவறானது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் மழையானது மிகவும் தீவிரம் காட்டி வந்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனையடுத்து,உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் … Read more

“காக்கி உடையின் கம்பீரம்;மனதில் இருக்கின்ற அன்பின் ஈரம்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு!

சென்னை:காக்கி உடையின் கம்பீரத்தையும், அவர் மனதில் இருக்கின்ற அன்பின் ஈரத்தையும் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களின் செயல் வெளிப்படுத்துகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று கனமழை உடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து வருகிறதுஅந்த வகையில்,சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞன் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று காவல் … Read more

“தமிழக அரசை இப்போது குறை கூற முடியாது” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

சென்னை:போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழையால் சென்னை முழுக்க மழைநீரால் மிதந்து கொண்டிருக்கிறது.இதனையடுத்து,மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இதற்கிடையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கடந்த 3 நாட்களாக சென்று நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினர்.அதேபோல,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு,மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். … Read more