#BREAKING : முதுபெரும் தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி காலமானார்..!

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் நாகசாமி காலமானார்.  தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் நாகசாமி.  தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞராக இருந்தவர் நாகசாமி. தற்போது சென்னையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. மத்திய அரசு, நாகசாமியின் பணிகளை பாராட்டி, 2018-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

“எந்த முன்னேற்றமும் இல்லை…6 கட்ட அறிக்கைகளையும் விரைந்து வெளியிட வேண்டும்” – ராமதாஸ் கோரிக்கை!

கீழடி அகழாய்வு தொடர்பாக 6 கட்ட அறிக்கைகளையும் விரைந்து வெளியிட நடவடிக்கை தேவை என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கீழடி அகழாய்வின் முதல் மூன்று கட்ட அறிக்கைகளை விரைந்து வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணையிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும்,கீழடி அகழாய்வு தொடர்பாக 6 கட்ட அறிக்கைகளையும் விரைந்து வெளியிட நடவடிக்கை தேவை மற்றும் எட்டாவது கட்ட அகழாய்வை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் … Read more

17 ஆண்டுகளுக்கு பின் ஆதிச்சநல்லூரில் இன்று மீண்டும் அகழாய்வுப்பணி தொடக்கம்…!

17 ஆண்டுகளுக்குப் பின்பு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று அகழ்வுப் பணி தொடங்கியுள்ளது. முதன்முதலாக ஆதிச்சநல்லூரில் 1876-ல் ஆண்டு அகழாய்வு நடைபெற்றது. பின், 1903-2004ஆம் ஆண்டுகளில் மீண்டும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் 2004-2005 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி குழுவினர் ஆய்வு பணியை மேற்கொண்டனர். இந்த ஆய்வு பணியில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பின்பு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை … Read more

திருக்கோயில் சிலைகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்ய 12 குழுக்கள் அமைப்பு…!

திருக்கோயில் சிலைகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்ய தமிழ்நாடு தொல்லியல் துறை 12 குழுக்களை அமைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்ய தொல்லியல் அலுவலர்கள் அடங்கிய 12 குழுக்களை தமிழ்நாடு தொல்லியல் துறை அமைத்துள்ளது. அதன்படி,தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உட்பட்ட சென்னை,வேலூர்,விழுப்புரம் திருச்சி ,தஞ்சாவூர்,காஞ்சிபுரம்,மயிலாடுதுறை,சேலம்,கோவை,மதுரை,சிவகங்கை,திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கான 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும்,ஒவ்வொரு குழுவுக்கும் இரண்டு அல்லது மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த … Read more

தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை.., பயிலுதவி தொகை ரூ.5,000 – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வழங்கும் இரண்டாண்டு முழுநேர தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு. 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ள இரண்டு ஆண்டு காலை முழுநேர தொல்லியியல் முதுநிலை பட்டாய படிப்பிற்கு (Post Graduate Diploma in Archaeology) 2021-23 ஆம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: முதுநிலை, முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 55% மதிப்பெண் பெற்று … Read more