2 நாட்கள் பயணமாக துபாய் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு..!

PM Modi says about Rajasthan

இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், 2 நாட்கள் பயணமாக நேற்று இரவு துபாய்  சென்றார். உலக காலநிலை நடவடிக்கை குறித்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர துபாய் சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்த நிலையில், நேற்று இரவு துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாடு இன்று தொடங்கி டிசம்பர் 12-ம் தேதி வரை … Read more

#Justnow:வெளிநாடு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துபாய் எக்ஸ்போவில் கலந்துகொண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில்,ஐந்து நாள் அரசுமுறை பயணமாக கடந்த மார்ச் மாதம் துபாய்க்குச் சென்றிருந்தார்.இதனைத் தொடர்ந்து,முதல்வர் அபுதாபிக்கும் சென்றார். இதனைத் தொடர்ந்து,முதல்வர் மு.க.ஸ்டாலின்,லுலு குழுமத்தின் தலைவர் யூசுஃப் அலியை அபுதாபியில் சந்தித்துப் பேசினார்.அப்போது,லுலு நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தின்படி,லுலு நிறுவனம் தமிழகத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்து 3 திட்டங்களை தொடங்க உள்ளது என தெரிக்கவிக்கப்பட்டது. மேலும்,பல்வேறு … Read more

ரூ.6,100 கோடிக்கு ஒப்பந்தங்கள்;14,700 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் அறிவிப்பு!

சென்னை:கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதக் கப்பல்களாகத் தான் இருந்தது என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு. துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது.இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றார். அங்கு தொழில் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார். அபுதாபி பயணம்: அதனை தொடர்ந்து,பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து முதலீட்டாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். … Read more

எனக்குக் கிடைத்த வரவேற்பும் அன்பும் தமிழ்நாட்டு மக்களுக்கான பெருமை! – முதல்வர் ட்வீட்

எனக்குக் கிடைத்த வரவேற்பும் அன்பும் தமிழ்நாட்டு மக்களுக்கான பெருமை என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றார். அங்கு தொழில் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து முதலீட்டாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பல ஆயிரம் கோடி மதிப்பிலான … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்…! எப்போது தெரியுமா?

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற மார்ச் 26, 27 தேதிகளில் துபாய்  பயணம் செல்கிறார்.   துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் மாபெரும் கண்காட்சி இம்மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற மார்ச் 26, 27 தேதிகளில் துபாய்  பயணம் செல்கிறார்.   கண்காட்சியில் கைத்தறி, விவசாயம், சிறு தொழில் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படும் வகையில் தமிழகம் சார்பில் அரங்கம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக … Read more