அண்ணாமலை அதீத கற்பனையில் பேசுகிறார்! அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

minister jeyakumar annamalai

Jayakumar : அண்ணாமலை அதீத கற்பனையில் பேசுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் அனைவரும் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று தேனி பாஜக கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரப்புரை செய்தார். அப்போது அந்த பிரச்சாரத்தின் போது  ” மக்களவை தேர்தல் முடிந்து அதாவது ஜூன் 4ம் … Read more

டி.டி.வி.தினகரன் வீட்டு நாயாக இருந்தோம்… அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு.!

TTV Dhinakaran - RB Udhayakumar

T.T.V.Dhinakaran : முன்பு உங்கள் வீட்டு காவல் நாயாக இருந்தோம் என டிடிவி.தினகரனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி. மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் டிடிவி.தினகரன் ஆகியோர் களமிறங்குகின்றனர். டி.டி.வி.தினகரன், தங்கத்தமிழ்செல்வன் ஆகிய இருவருமே அதிமுக கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் என்பதால் இந்த தேர்தல் களம் மிக சுவாரஸ்யமாகவும், பிரச்சார களம் மிக தீவிரமாகவும் இருக்கிறது. முன்னதாக தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி.தினகரன் பிரச்சாரம் … Read more

பொன்னாடை, பூங்கொத்து வேண்டாம்.. நிதியுதவி வேண்டும்.! டிடிவி கோரிக்கை.!

AMMK Leader TTV Dhinakaran

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) கட்சியின் தலைவருமான டிடிவி.தினகரன் தனது கட்சி நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு ஓர் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில், தனது கட்சி வளர்ச்சிக்காக நிதி கொடுத்து உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து டி.டி.வி.தினகரன் வெளியிட்ட செய்தி குறிப்பில், நீங்கள் (ஆதரவாளர்கள்) என் மீது கொண்டுள்ள அன்பும், நான் உங்கள் மீது கொண்டுள்ள அன்பும் அவ்வளவு அற்புதமானது. எனக்கு எப்போதும் எல்லாமும் ஆகிய கழக உடன்பிறப்புகளுக்கு அன்புகலந்த கண்டிப்பான … Read more

பிரதமர் வந்து ஒருவாரம் ஆன பின்னர் காவல்துறை மீது ஏன் இந்த குற்றசாட்டு.? டி.டி.வி.தினகரன் கேள்வி.!

தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும். பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை இந்த குற்றசாட்டை முன் வைத்தார் என தெரியவில்லை. – டிடிவி.தினகரன் குற்றசாட்டு. தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைத்து அதன் மீதான கரையை துடைக்க முதல்வர் தான் அனுமதி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை … Read more

விமர்சனங்களுக்குள் சிக்காமல் ஆளுநர் செயல்பட வேண்டும்.! டிடிவி.தினகரன் கருத்து.!

ஆதார் எண் உடன் மின் இணைப்பை இணைக்கும் செயல்பாட்டுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். – டி.டி.வி.தினகரன்.  ஆன்லைன் விளையாட்டு தடை சட்ட மசோதாவுக்கு இன்னும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்த்து வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து அமமுக கட்சி தலைவர் டிடிவி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இன்று செய்தியாளர்களிடன் கூறுகையில், சட்ட மசோதா என்பது எந்த ஆட்சி காலத்தில் கொண்டு வந்தாலும் சரி. அதனை … Read more

அதிமுக பிளவு.? பதவி வெறி.. சிலரின் சுயநலம்..! டி.டி.வி.தினகரன் அதிரடி கருத்து.!

இன்னோர் கட்சியில் நடக்கும் கூத்து பற்றி நாம் கருத்து சொன்னால் நன்றாக இருக்காது. சிலரின் பதவி வெறி, சுயநலத்தால் இப்படி இருக்கிறது. இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும் – என டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.  அதிமுக கட்சி விவகாரம் தான் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக இருக்கிறது. இதில் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பு என இரு பிரிவினரும் மாறி மாறி நீதிமன்றம்  சென்று, தீர்ப்பு, மேல்முறையீடு என சென்று சென்று கொண்டிருக்கின்றனர். … Read more

டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்த சசிகலா புஷ்பா…

ஆர்.கே.நகர்; நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட  டி.டி.வி.தினகரன் பிரமாண்டமாக  வெற்றி பெற்றார். இதனையடுத்து எடப்பாடி அணியைச் சேர்ந்த வேலூர் எம்.பி செங்குட்டுவன் என்பவர் நேற்று டி.டி.வி.தினகரனைச் சென்று நேரில் சந்தித்தார். மற்றும்  இன்று அ.தி.மு.கவில் நீக்கப்பட்ட எம்.பி சசிகலா புஷ்பா மற்றும்  நடிகர் மயில்சாமி ஆகியோர்  டி.டி.வி.தினகரனைச் சந்தித்தனர்… sources; dinasuvadu.com

கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன்…

சென்னை ; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இறுதி முடிவுகளின்படி குக்கர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் 89,013 வாக்குகளை வாங்கி மிக பிரமாண்டமான  வெற்றியை  பெற்றுள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் 50.32 சதவீதம் வாக்குகளை இவர் பெற்றுள்ளார். இந்நிலையில் ஆர்.கே.நகர் மக்களுக்கும் மற்றும்  ’தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’ என்று தினகரன் தெரிவித்துள்ளார்… sources;dinasuvadu.com