குரூப் 2 பணியிடங்கள் 6,151 ஆக அதிகரிப்பு.!

TNPSC Result

குரூப் 2 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை 6,151 ஆக அதிகரித்து டி.என்.பி.எஸ்.சி (TNPSC) அறிவித்துள்ளது. முன்னதாக, குரூப் 2 பணியிடங்களில் 5,413ஆக இருந்த நிலையில், 738 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 6,151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 12இல் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வரும் 12ம் தேதி வெளியாக உள்ள நிலையில், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

பொறியியல் சார்நிலைப் பணிகளின் எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு..!

பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளின் எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக  டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது: “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்:06/2021, நாள் 05.03.2021-ன் வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் பதவிகளுக்கான திட்டமிடப்பட்ட எழுத்துத் … Read more