#Breaking:ஜிப்மரில் இந்தி திணிப்பா?- துணை ஆளுநர் தமிழிசை சொன்ன முக்கிய தகவல்!

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் அலுவல் மொழியாக இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி … Read more

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி..!

டெல்லியில் இருந்து  திரும்பிய ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து  திரும்பிய … Read more

“ஜிப்மர் மருத்துவமனை அரசு மருத்துவமனையா? அல்லது தனியார் மருத்துவமனையா?” – எம்பி ரவிக்குமார் கண்டனம்..!

புதுச்சேரியில் உள்ள பிரபல ஜிப்மர் மருத்துவமனைக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சியின் போது 1872 ஆம் ஆண்டு ஜிப்மர் மருத்துவமனை நிறுவப்பட்டது.1964 ஆம் ஆண்டுதான் ஜிப்மர் மருத்துவமனை என்ற பெயர் மாற்றம் கண்டது.இதனையடுத்து, இந்த அரசு மருத்துவமனை தற்போது வரை மருத்துவத் துறையில் பல்வேறு முத்திரைகளைப் பதித்து வருகிறது. இந்நிலையில்,ஜிப்மர் மருத்துவமனை அரசு மருத்துவமனையா அல்லது தனியார் மருத்துவமனையா? என்று எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் … Read more