சென்னையில் போலி பாஸ்போர்ட் கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது..!

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலைச் சேர்ந்தவர்களை போலீசார் வேட்டையாடி பிடித்து கைது செய்து வருகிறார்கள். கடந்த 7.5.18 அன்று பிரான்ஸ் நாட்டிலிருந்து விமானத்தில் சென்னை வந்த தேவராஜ் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தேனியைச் சேர்ந்த அவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து அசோக்குமார் என்பவர் பெயரில் ஒரு போலி பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல கடந்த 7-ந் தேதி அன்று மதிவாணன் (வயது 58) என்பவர் … Read more