ஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..!

ஹிமாச்சலப்பிரதேசத்தில் பயணிகளின் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.  ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பரோக் ரயில் நிலையம் அருகில், கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தண்டவாளத்தில் கற்கள் விழுந்து கிடந்துள்ளது. இதன் காரணத்தால் இன்று காலை அந்த ரயில்தடத்தில் வந்த கல்கா-சிம்லா பயணிகள் ரயில் தடம் புரண்டு கவிழ்ந்துள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 9 பயணிகள் இருந்துள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இதில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.