இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்.! ஓபிஎஸ் பரபரப்பு கோரிக்கை.!

O Panneerselvam

ADMK : அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பிரிந்தனர். இதில் இபிஎஸ் பக்கம் அதிக ஆதரவு இருந்த காரணத்தால் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என அனைத்தும் தற்போது வரையில் இபிஎஸ்க்கு ஆதரவாகவே உத்தரவு வழங்கியுள்ளனர். மேலும், நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக சின்னம், கொடி பயன்படுத்தவும் … Read more

பிரதமர் வந்து ஒருவாரம் ஆன பின்னர் காவல்துறை மீது ஏன் இந்த குற்றசாட்டு.? டி.டி.வி.தினகரன் கேள்வி.!

தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும். பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை இந்த குற்றசாட்டை முன் வைத்தார் என தெரியவில்லை. – டிடிவி.தினகரன் குற்றசாட்டு. தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைத்து அதன் மீதான கரையை துடைக்க முதல்வர் தான் அனுமதி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை … Read more

இரட்டை இலை விவகாரம் – அமலாக்கத்துறை விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜர்

டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜர். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜராகியுள்ளார். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆஜரானார். ஏற்கனவே இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சம்மன் அனுப்பப்பட்டால் விசாரணைக்கு ஆஜராவேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். அதன்படி, இரட்டை இலை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை டிடிவிக்கு சம்மன் அனுப்பிய நிலையில், இன்று ஆஜராகியுள்ளார். இரட்டை … Read more

இரட்டை இலை வழக்கில் முக்கிய சாட்சியம் தற்கொலை!

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை. இரட்டை இலை சின்ன பெற்று தருவதற்கு லஞ்ச கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை செய்துகொண்டார். சென்னை அடுத்த திருவேற்காட்டில் வீட்டில் கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். டிடிவி தினகரனிடம் இடைத்தரகர் சுகேஷ் லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்தவர் வழக்கறிஞர் கோபிநாத். டெல்லியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கோபிநாத்தை தொடர்புகொண்டு விசாரணைக்கு ஆஜராகுமாறு … Read more

இரட்டை இலை விவகாரம் : தனிக்கட்சி தொடங்கும் தினகரன்???

இரட்டை இலை சின்னமும் கட்சியும் கைவிட்டு போனதால் தினகரன் அணி வருத்தத்தில் உள்ளது. கட்சியும் சின்னமும் இனி இபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு மட்டுமே சொந்தமாகி இருப்பதால் அடுத்த வரும் R.K.நகர் இடைத்தேர்தலில் கட்சி பெயரையும் சின்னத்தையும் தினகரன் தரப்பு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.   இதனை தொடர்ந்து கட்சியிலுள்ள துணை பொதுசெயலாளர் பதவியும் பறிபோய் உள்ளது. R.K.நகர் இடைத்தேர்தலில் கொடுக்கப்பட்ட தொப்பி சின்னமும் இனி இல்லை. இருந்தாலும் இடைதேர்தலில் தினகரன் கண்டிப்பாக போட்டியிடுவதாக கூறினார். … Read more

இரட்டை இலை விவகாரத்தில் குரல் மாதிரியை தர எதிர்த்து T.T.V.தினகரன் சார்பில் மனு

இரட்டை இலை சின்னம் பெற சசிகலா தினகரன் அணி சார்பாக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குரல் மாதிரியை தர எதிர்ப்பு தெரிவித்து TTV.தினகரன் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் குரல் மாதிரியை கேட்பது மக்கள் அடிப்படை உரிமைக்கு எதிரானது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 19ஆம் தேதிதான் விசாரிக்க உள்ளதாம்