நீதியின் பக்கம் நின்ற நீதிமன்றத்துக்கு நன்றி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் விடுதியில் தங்கி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், 19ஆம் தேதி உயிரிழந்தார். மாணவி தற்கொலை விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மாணவியின் … Read more

#BREAKING: அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் – நீதிமன்றம் உத்தரவு!

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், தற்போது அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் மதுரை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி தஞ்சையில் படித்து வந்த … Read more

#BREAKING: மாணவி தற்கொலையில் மதப்பரப்புரை புகார் இல்லை – பள்ளிக்கல்வித்துறை

மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மத தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம். அரியலூா் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சோ்ந்த 17 வயது மாணவி, இவா் தஞ்சாவூா் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். விடுதியில் தங்கியிருந்த படித்து வந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். பள்ளி மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக முழுவதும் … Read more

அரியலூர் மாணவி தற்கொலை – சென்னையில் பாஜகவினர் போராட்டம்..!

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் நிலையில், தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை அவர்கள், … Read more