வானவில் மன்றத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!

திருச்சியில் காட்டூர் பாப்பா குறிச்சி அரசு பள்ளியில் வானவில் மன்றத்தை தொடங்கி வைத்த முதல்வர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் காட்டூர் பாப்பா குறிச்சி அரசு பள்ளியில் வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார். மேலும் நடமாடும் அறிவியல், கணினி கணித ஆய்வக வாகனங்களையும் முதல்வர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  13,200 அரசு பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வானவில் மன்றம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவியல் மனப்பான்மை மேம்படுத்துவதற்காக இந்த … Read more

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் – ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு

அடுத்த கல்வியாண்டில் மலைப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்பளிச்சட்டை வழங்க உததரவு.  மலைப்பகுதிகளில் வசிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க தமிழக ராசு ஒப்பந்தபுள்ளி கோரியுள்ளது. அடுத்த கல்வியாண்டில் ( 2023-2024 ) மலைப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்பளிச்சட்டை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#Justnow:அனைத்து பள்ளிகளிலும் இவை கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார்.இதனைத் தொடர்ந்து,10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று (24-ம் தேதி) முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.பள்ளிகள் வாயிலாக இன்று காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.dge.tn.nic.in இணையதளம் மூலமாகவும் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.இதனிடையே,11 ஆம் வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. … Read more

அரசு பள்ளிக்கு பூட்டு போட்ட நபர்…! போலிஸாரின் அதிரடி முடிவு…!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் செயல்பட்டு வந்த அரசு தொடக்கப்பள்ளிக்கு பூட்டு போட்ட நபரை கைது செய்த போலீசார்.  புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பிச்சையா என்பவர் இந்த நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார். இதனையடுத்து, அவரது மகன் சுப்பையா தனது தந்தை தவறுதலாக இந்த இடத்தை தானமாக … Read more

#Justnow:அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கு;இந்த தொகை உயர்வு – தமிழக அரசு அரசாணை!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்,உடல் நலம் பராமரிப்பதற்காக,சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை ரூ.30-லிருந்து ரூ.50-ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக,தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 21.04.2022 அன்று 2022-2023ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டார்: அதன்படி,”22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்,உடல் … Read more

#Breaking:அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து – மாணவர்கள் தலையில் பலத்த காயம்

ராமநாதபுரம்:சாயல்குடி அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் இருவர் காயம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள வாகைக்குளம் அரசு தொடக்கப்  பள்ளியில் மேற்கூரையின் கட்டை கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த கட்டை தலையில் விழுந்ததில் நான்காம் வகுப்பு மாணவி ஒருவர் மற்றும் இரண்டாம்  வகுப்பு மாணவர் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,அவர்கள் இருவரையும் சாயல்குடி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு நான்காம் … Read more

திடீரென்று வகுப்பறையில் ஏற்பட்ட 10 அடி ஆழம் கொண்ட பள்ளம்..! மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்..!

சொரக்காய்ப்பேட்டை அரசுப்பள்ளியில் மண் அரிப்பு ஏற்பட்டு, கட்டடங்கள் உருகுலைந்த நிலையில், வகுப்பறையில் திடீரென 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சமீப நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், திருவள்ளூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. … Read more

“அரசுப்பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு கருணைத் தொகை, முன்பணம் வழங்க வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை..!

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கருணைத் தொகை, முன்பணம் வழங்க அதிக செலவாகாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு அரசு கருணைத்தொகை,முன்பணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “தமிழக அரசு பள்ளிகளில் மிகக்குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தீப ஒளி திருநாள் கொண்டாட பொருளாதாரம் … Read more

#BREAKING : தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு…! பேரவையில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் …!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளார். கடந்த 4-ம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவெடுத்த நிலையில், நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே இதுதொடர்பான தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், … Read more