வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு! – மநீம வரவேற்பு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்புக்கு வரவேற்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளைத் தொடங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை மநீம வரவேற்கிறது. இந்நடவடிக்கையானது போலி வாக்காளர்களை நீக்குவதற்கு உதவும். கள்ள ஒட்டுகளைத் தடுக்கும். அதேசமயத்தில் … Read more

கிராமசபை கூட்டத்தின் செலவின வரம்பு ரூ.5,000 ஆக உயர்வு..! மநீம வரவேற்பு..!

கிராமசபை கூட்டத்தின் செலவின வரம்பு ரூ.5,000 ஆக உயர்த்தியதற்க்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு.  கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கான செலவினம் ரூ.1000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதற்க்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கிராமசபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.1000ல் இருந்து ரூ.5000ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அடுத்தபடியாக,கிராமசபைத் … Read more

நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும் – கமலஹாசன்

நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும் என கமலஹாசன் கடிதம்.  தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்களின் மரணம் தொடர்ந்து வருவதாகவும் இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  கமலஹாசன் அவர்கள் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், பொது தேர்வில் தோல்வி, நீட் தேர்வு பயம், பெற்றோர் கண்டிப்பு, ஆசிரியர் அவமதிப்பு, காதல் விவகாரம், வறுமை என தற்கொலைக்கான  காரணிகள் வேறுபட்டாலும் சவால்களை துணிவுடன் எதிர்கொண்டு போராடி வெல்லும் மனவலிமையை நம் பிள்ளைகள் மெல்ல இழந்து … Read more

இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் – கமலஹாசன்

வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்து கமலஹாசன் ட்வீட் செய்துள்ளார்.  அந்த ட்விட்டர் பதிவில், ‘கிராம சபைகளைப் போலவே, நகர்ப்புற மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்திற்கு வழிகோலும் ஏரியா சபை, வார்டு கமிட்டிகளை அமைப்பதற்கான சட்டம் 2010-இல் கொண்டுவரப்பட்டது. இவற்றை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு வகுக்காததால் இந்தச் சட்டம் 12 ஆண்டுகளாகச் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது. இதற்கான விதிகளை வகுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரலெழுப்பிவந்தது. நான் கடந்த … Read more

தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன் – வானதி சீனிவாசன்

தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன் என வானதி சீனிவாசன் ட்வீட்.  கடந்த ஜூன் 3-ஆம் தேதி கமலஹாசன் நடிப்பில் திரைக்கு வந்த விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், பாஜக எம்எல்ஏவும் வானதி சீனிவாசன் அவர்களும் விக்ரம் திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி … Read more

இதை அரசு வேடிக்கை பார்க்காமல், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் – மநீம

உயிரைக் காக்கும் மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம். கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.  சேலம் மாவட்டம் மேட்டூரில், மக்களின் உயிரைக் காக்கும் அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மநீம கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், மக்களின் உயிரைக் காக்கும் அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம் மேட்டூரில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இரண்டாம் நாளாக தொடரும் … Read more

ஆசிரியர்கள் வாழ்க்கை முழுக்க போராடிக்கொண்டே இருக்க வேண்டுமா? – மநீம

ஆசிரியர்கள் வாழ்க்கை முழுக்க போராடிக்கொண்டே இருக்க வேண்டுமா? மக்கள் நீதி மய்யம் கண்டன அறிக்கை தமிழகத்தில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஏராளமானோர் வேலைக்காகக் காத்திருக்கும்போது, மிகக் குறைந்த சம்பளத்தில், தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது என மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘கொரானாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் குறைந்துள்ளதாக தேசிய சாதனை ஆய்வு அமைப்பு, புள்ளிவிவரங்களுடன் … Read more

இந்த வெற்றி மிக ஈஸியாக வந்தது இல்லை – கமலஹாசன்

10 வருடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நான் ரிலீஸ் செய்த படம் விக்ரம் தான் என கமலஹாசன் பேச்சு. விக்ரம் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில், விக்ரம் படத்தில் நடித்த பிரபலங்கள் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில், நடிகர் கமலஹாசன் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், படத்தின் வெற்றிக்கு நான் காரணம் என்று சொல்லிவிட முடியாது; உடன் நின்றவர்களால்தான் வெற்றி சாத்தியமானது 10 வருடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் … Read more

பள்ளிகளில் பரவும் சா`தீ’ – மநீம கட்சி ட்வீட்

இன்னமும் சாதி என்னும் தீயை அணைக்காமல், ஊதிக்கொண்டே இருந்தால், எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும் என மக்கள் நீதி மய்யம் கட்சி ட்வீட். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை சாதி ரீதியாகப் பேசியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி ட்வீட் செய்துள்ளது. இதுகுறித்து மநீம ட்விட்டர் பக்கத்தில், ‘பள்ளிகளில் பரவும் சா`தீ’… தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரிடம் … Read more

#BREAKING : நடிகர் கமலஹாசன் – முதலமைச்சருடன் சந்திப்பு…!

விக்ரம் பட வெற்றியை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கமலஹாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிகைகள்,காயத்திரி, மைனா நந்தினி, ஷிவானி நாரயணன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அதிரடி ஆக்சன் … Read more