பாகிஸ்தான் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 135 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. 2-வது போட்டியில் பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
அதன்படி முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி ஆட்டம் தொடக்கத்தில் இருந்து விக்கெட்டை பறிகொடுக்க தொடங்கியது. இதனால், களமிறங்கிய சில வீரர்கள் மட்டும் ரன் எடுக்க மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை இதன் காரணமாக நியூஸிலாந்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் ஹரிஸ் ரவூப் 4 விக்கெட்டை பறித்தார்.
135 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பாபர் அசாம் , முகமது ரிஸ்வான் இருவரும் களமிறங்க வந்த வேகத்தில் பாபர் அசாம் 9 ரன் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய முகமது ஹபீஸ், ஃபக்கர் ஜமான் தலா 11 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். சிறப்பாக விளையாடி வந்த முகமது ரிஸ்வான் 33 ரன் எடுத்து 12 ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினார்.
பிறகு களம் கண்ட ஆசிப் அலி, சாயிப் மாலிக் இருவரும் பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிபெற செய்தனர். பாகிஸ்தான் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 135 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் ஆசிப் அலி 27*, சாயிப் மாலிக் 26* ரன் எடுத்து இருந்தனர்.
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…