வாக்குப்பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஆசிரியை சஸ்பெண்ட்.!

தபால் வாக்கை பதிவு செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் சரகம் சுரண்டையில் ஆர்சி நடுநிலை பள்ளி ஆசிரியையாக பணிபுரியும் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் என்பவர் தன்னுடைய தபால் வாக்கினை பதிவு செய்து, அதனை பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியை பணிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்