ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்கி முடித்து விட்டார் இயக்குனர் சுசீந்திரன்!!

வெண்ணிலா கபடி குழு படம் மூலம்  தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். இவர் உடனே அடுத்தடுத்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். இவரது இயக்கத்தில் ஜீவா, ஆதலால்  காதல் செய்வீர், பாண்டிய நாடு ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இவர் ஒரு படத்தின் வேலையை விரைவில் முடித்து விட்டு அது ரிலீஸாகும் கேப்பில் அடுத்தப்பட ஷூட்டிங் முக்கால்வாசியை முடித்து விடுவார். அதே தற்போது இவரது இயக்கத்தில் அடுத்ததாக கால்பந்தை மையாமாக கொண்டு சாம்பியன் எனும் படம், சசிகுமார், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பெண்கள் கபடியை மையப்படுத்திய கென்னடி கபடி க்ளப், பிறகு காதல் படமாக உருவாகி வரும் ஏஞ்சலீனா ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இந்த படங்களின் ரிலீஸ் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும்  என தெரிகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment