சூர்யாவின் மனிதாபிமான பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன்-வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், சூர்யாவின் மனிதாபிமான பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன். சூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ் சமூகத்தை தோள் கொடுத்து உயர்த்துவார்கள்.

அன்னை தெரசா போன்றவர்கள் செய்த தியாகப் பணியின் சாயல் சூர்யாவின் அகரம் பவுண்டேசனில் திகழ்வதை எண்ணி மிகவும் பரவசம் அடைந்தேன்.புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு கலை உலகிலிருந்து சூர்யா தனது நியாயமான எதிர்ப்பை பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.