ஜெய் பீம் சர்ச்சைகள்.! போதும்டா சாமி என துபாய்க்கு செல்ல முடிவெடுத்த சூர்யா.!?

ஜெய் பீம் திரைப்பட சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை என்பதால், சில நாட்கள் வெளிநாடு சென்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்ப சூர்யா முடிவு எடுத்ததாக தெரிகிறது.

சூர்யா நடிப்பில் அமேசான் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் எந்தளவுக்கு ஆதரவை சம்பாரித்ததோ அந்த அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்தது, சந்தித்தும் வருகிறது. பாமக மற்றும் வன்னியர் சங்கத்திடம் இருந்து எதிர்ப்பு குரல்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

இதற்கு இரு தரப்பில் இருந்தும் அறிக்கைகளும் வெளியாகி கொண்டு இருந்தன. மேலும், அச்சுறுத்தல்கள் இருக்கிறது. அதன் காரணமாக அசம்பாவிதங்கள் நடந்துவிட கூடாது என சூர்யா வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு நிற்கின்றனர்.

இதன் காரணமாக நடிகர் சூர்யா மன உளைச்சலில் இருக்கிறாராம். இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டாலும் சர்ச்சை தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், சற்று இதிலிருந்து விலகி இருக்க சூர்யா முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

அதனால், விரைவில், குடும்பத்துடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளாராம். அநேகமாக அவர் துபாய் நாட்டிற்கு செல்வார் என கூறப்படுகிறது. வீட்டு வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் நிற்பதால் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் சூர்யா என தெரிகிறது.

இந்த சர்ச்சைகள் கொஞ்சம் தணிந்த பின்னர் மீண்டும் இந்தியா வர சூர்யா முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.