#BREAKING : கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்

கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது .அவர்களது மனுவில் ,தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக  தெரிவிக்கப்பட்டது.

இந்த  வழக்கின் விசாரணை நேற்று  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று  தீர்ப்பு வழங்கப்படும் என்று  அறிவித்தது.அதன்படி இன்று விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.மேலும்  எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது.ராஜினாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏக்களை நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.