மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு ரத்து.., உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

கடந்த 2018-ல் மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கான 16% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் 50% மேல் மொத்த இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்ற 1992 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், மராத்தா சமூகத்தினருக்கு 50 சதவீதத்திற்கு மேல் கூடுதலாக 16% இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீட்டை வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.

மராத்தா சமூகத்தினருக்கு அதிக இடஒதுக்கீட்டை வழங்க எந்த முகாந்திரமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். 1992 ஆம் ஆண்டில் 50% மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று வழங்கப்பட்ட   தீர்ப்பை மாற்றி அமைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 60 % மேல் இடஒதுக்கீடு உள்ளது. இந்த இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பின் கீழ் வருமா என்றால் வராது. காரணம் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் இடஒதுக்கீடு இந்திய அரசியல் சாசன பாதுகாப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

murugan

Recent Posts

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…

19 mins ago

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு.! 56 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை.!

JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…

22 mins ago

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை.!

Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…

23 mins ago

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…

1 hour ago

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

1 hour ago

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!

Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

2 hours ago