கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டணம்.. மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அளித்து வரும் நிலையில், அதற்க்கு கட்டணத்தை நிர்ணயிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தால் இந்தியாவில் 2,26,770 பேர் பாதிக்கப்பட்டு, 6,348 பேர் உயிரிழந்ததாக மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு பல தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், அதற்க்கு கட்டணத்தை நிர்ணயிக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.