#BIGBREAKING :விவசாயிகளுக்கு ஆதரவு… வீட்டுக்காவலில் அரவிந்த் கெஜ்ரிவால்..!

#BIGBREAKING :விவசாயிகளுக்கு ஆதரவு… வீட்டுக்காவலில் அரவிந்த் கெஜ்ரிவால்..!

இரண்டாவது வாரமாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும்,பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று சிங்கு எல்லைப் பகுதிக்கு சென்று விவசாயிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் விவசாயிகள் போராட்டத்திற்கு நேரடியாக சென்று வந்த முதல் முதல்வர் வீட்டிற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, எனவும் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


ஆம் ஆத்மி கட்சி  மூத்த தலைவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு உணவு , தண்ணீர் மற்றும் அவர் குளிருக்கு தேவையான போர்வை போன்ற பொருட்களை வழங்கி தங்களது ஆதரவை கொடுத்து வருகிறனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube