தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனக்கான கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். மேலும், கொரோனாவின் இரண்டாம் அலையில் பல்வேறு அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலங்கள் என முக்கியமான பல பிரமுகர்கள் மறைந்துவிட்டனர். எனவே கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இருக்க வேண்டும் என அடிக்கடி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
ஆனால் அண்மையில், தமிழ் திரையுலகின் காமெடி நடிகர் விவேக் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் தடுப்பூசி குறித்த வதந்தி தீயாக பரவி வந்த நிலையில், சிலர் இவற்றை நம்பினாலும் பலர் இவற்றை பொய்யென மெய்ப்பிக்கும் வகையில் தங்களுக்கான தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனக்கான தடுப்பூசியை இன்று போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
Air Force Plane Crash: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…
Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…