பொன்னியின் செல்வன் படத்தின் சூப்பர் அப்டேட்.!

பொன்னியின் செல்வன் படத்தின் சூப்பர் அப்டேட்.!

பொன்னியின் செல்வன் படத்தின் 20% படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது.அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.

அது சமீபத்தில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் ,இன்னும் 20% படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாகவும் கூறப்படுகிறது.எனவே பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை இந்தியாவின் வடக்கு நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் ,2022-ம் ஆண்டின் முதல் பாதியில் படம் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube