மூன்றாவது முறையாக இணைந்த சூப்பர் கூட்டணி..!

மூன்றாவது முறையாக இணைந்த சூப்பர் கூட்டணி..!

சிம்புவின் 47 வது திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பார் என்று இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

நடிகர் சிம்பு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனது 47 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பாளர் எ.ஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படம் அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகவும் சிறந்த காதலர் படம் என்பதில் எந்த ஒரு சந்ததேகமுமில்லை. இந்த படம் வெற்றியடைய மிகவும் முக்கியமான ஒரு காரணம் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் தான். அதற்கு பிறகு இதே கூட்டணியில் உருவான அச்சம் என்பது மடமையடா திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.

இந்த நிலையில் தற்பொழு மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியுள்ளது என்றே கூறலாம். மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் யார் யார் என்ற தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube