கல்லூரி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதி அறையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.இதை பார்த்த மற்ற மாணவிகள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இறந்த மாணவி எஸ்.பி.மருத்துவ கல்லூரியில் பயிற்சியாளராக இருந்த மனிஷா குமாவத் என தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.விசாரணையில் கல்லூரி முதல்வரான ஹெச்.எஸ்.குமார் என்பவர் இறந்த பெண் மிகவும் முத்திசாலியான மாணவி அவரின் தற்கொலைக்கான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இதனால் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.