வீட்டிற்குள் 10 அடி ஆழத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..! அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!

செங்கல்பட்டு மாவட்டம், ஜெகதீசங்கரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், வீட்டினுள் உள்ள அறைக்குள் திடீரென்று 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிற நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதோடு, வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், ஜெகதீசங்கரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், வீட்டினுள் உள்ள வரவேற்பறைக்குள் திடீரென்று 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ள நிலையில், அந்த பள்ளத்திற்குள் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வீட்டில் இருந்து அம்மக்கள் வெளியே செல்லும் நிலையில், இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஒரு ஆய்வை மேற்கொள்ள  வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.