ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்றுள்ள சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு அரசு வேலை வழங்க உத்தரவு ..!

ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்றுள்ள சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகிய இருவருக்கும் அரசு வேலை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் தமிழகத்திலிருந்து 5 பேர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில், மிகுந்த வறுமையிலும் போராடி ஒலிம்பிக் வரை  சென்றுள்ள சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகிய இருவரும் தாயகம் திரும்பிய உடன் அரசு அரசு வேலை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக
சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் சென்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். மேலும், தங்கம் வென்றால் ரூ.3 கோடியும், வெள்ளி வென்றால் ரூ.2 கோடியும், வெண்கலம் வென்றால் ரூ.1 கோடியும் வழங்கப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan