மாணவர்களை கண்டிப்பாக பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது- அமைச்சர் அன்பில் மகேஷ்..!

தனியார் பள்ளிகள் மாணவர்களை கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

சென்னை அடையாரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகள் மாணவர்களை கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது. ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டாம் என தனியார் பள்ளிகளை கேட்டுக்கொள்கிறேன்.

மாஸ்க் அணியாமல் வரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே மாஸ்க் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

author avatar
murugan