நெருக்கடியில் மாணவர்கள்.! நாளை பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கு செல்லும் முதல் நாளே தேர்வு.!

நெருக்கடியில் மாணவர்கள்.! நாளை பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கு செல்லும் முதல் நாளே தேர்வு.!

  • பள்ளிகளில் வழக்கமாக அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 
  • நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது, பள்ளிகளுக்கு செல்லும் முதல் நாளே, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் திருப்புதல் தேர்வு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்று, முடிவடைந்தது. வழக்கமாக அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, அதன் வாக்கு எண்ணிக்ககை காரணமாக விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து வெற்றியாளர்களை அறிவிக்கப்பட்டது. அதனால் வரும் ஜனவரி 6-ம் தேதி நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பள்ளிகளுக்கு செல்லும் முதல் நாளே, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் திருப்புதல் தேர்வு நடைபெறவுள்ளது. இது ஏற்கனவே முடிவெடுத்திருந்ததால், இதில் எந்த மாற்றமும் இல்லாமல் தேர்வை நடத்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் நெருக்கடியில் உள்ளனர்.

மேலும் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள், அடுத்த வாரம் வழங்கப்பட்ட பின் பாடத்திட்டங்களை முடித்து, பின்னர் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டிய சூழ்நிலை காரணமாக ஆசிரியர்களும் நெருக்கடி நிலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube