மாணவர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் பள்ளிக்கு வரலாம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் பூட்டப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பி திறக்கப்படவில்லை. சில பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டாலும், ஒரு சில வகுப்புகளுக்கு மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பாடம் கற்றுக்கொள்வது முறையாக இல்லை என்பதால் பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் வரும்படியாக தற்பொழுது ஆலோசனை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக மாணவர்கள் எப்படி பள்ளிக்கு வரவேண்டும், பள்ளிக்கூடம் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைமுறை அண்மையில் கூறப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் வரவேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், மாணவர்கள் கல்வி சிறக்க வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இருப்பினும் விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30…
Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக…
LokSabha Election 2024: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை…
Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக…
Wrinkles-இளம் வயதிலேயே ஏற்படும் முதுமை தோற்றத்திற்கான காரணமும், அதற்கான தீர்வையும் இப்பதிவில் காண்போம். நாம் ஒருவரின் வயதை கணக்கிட வேண்டுமானால் அவரின் சருமத்தின் தோலை வைத்து தான்…