மாணவி தற்கொலை…பெற்றோர்கள் போராட்டம்….!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள C.S.I.C.C.C மாணவியர் விடுதியில் கணினி அறையில் நபியா என்ற மாணவி மாணவி தூக்கிட்டு கொண்டதாகவும் , அவர்   மருத்துவமனை சென்று வழியில் அவர் இறந்து விட்டதாகவும் பள்ளி நிர்வாகம் கூறுகின்றது. ஆனால் இதை நம்ப மறுத்த நபியா பெற்றோர்களும் உறவினர்களும் தாராபுரம் மருத்துவமனைக்கு சென்றனர்.
மருத்துவமனை சென்ற போது அங்கே பெற்றோர்களின் ஒப்புதல் இன்றி நபியா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.எனவே நபியா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோரும் உறவினர்களும் மூன்று வெவ்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்படுத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
author avatar
Dinasuvadu desk

Leave a Comment