பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ! அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர்

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து நாளை முதலமைச்சர் அறிவிக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

 தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, நாளை தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா பாதிப்பு  குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்  என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.