தனியார் பள்ளிகளில் 100% கட்டணம் வசூலிப்பபவர்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்!

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் முழுமையாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சை செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு தான் உள்ளது. இந்நிலை தொடர்ந்துகொண்டே செல்வதால் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தி வருகிறது.

இவ்வாறு ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவே அதற்கான கட்டணத்தையும் வசூலிக்கிறது. அவ்வாறு வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறைந்தபட்ச கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், முழுமையாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

author avatar
Rebekal