3 நாட்களில் புயல் உருவாக வாய்ப்பு ..! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை ..!

தென் தமிழகத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Image result for சென்னை வானிலை மையம்

இது தொடர்பாக சென்னை வானிலை மையம்  வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.புதிய காற்றழுத்தத்தால் சென்னைக்கு மழைக்கு வாய்ப்பில்லை.அதேபோல்  தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு கன மழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல்  மத்திய அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Leave a Comment