32.2 C
Chennai
Friday, June 2, 2023

ஐந்து முக்கிய திட்டங்கள்! இந்தெந்த தேதிகளில் அமல்.. கர்நாடகா முதல்வர் அதிரடி அறிவிப்பு!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் திட்டம் ஆகஸ்ட்...

ஏஜென்ட் டீனாவை மிஞ்சிய பிக் பாஸ் தனலட்சுமி…வைரலாகும் மிரள வைக்கும் வீடியோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில்...

40 லட்சம் வாடகை…25 கோடி வருமானம்..! ஆப்பிள் நிறுவனத்தின் அரிய சாதனை..!

இந்தியாவில் ஆப்பிளின் விற்பனை நிலையங்கள் தலா ரூ.22 முதல்...

பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 61,940 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 178.87 புள்ளிகள் அதிகரித்து 61,940 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,315 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் 3-வது நாளான இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியிருந்தது. இன்றைய வர்த்தக நாளில் 61,843 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 178.87 புள்ளிகள் அல்லது 0.29% என உயர்ந்து 61,940 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 49.15 புள்ளிகள் அல்லது 0.27% உயர்ந்து 18,315 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,761 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,265 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இண்டஸ்இண்ட் வங்கி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. இன்ஃபோசிஸ் லிமிடெட், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், லார்சன் & டூப்ரோ, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.