பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 61,872 புள்ளிகளாக நிறைவு..!

பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 61,872 புள்ளிகளாக நிறைவு..!

Stocks

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 98.84 புள்ளிகள் உயர்ந்து 61,872 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,321 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் 4 வது நாளான இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது. இன்றைய வர்த்தக நாளில் 61,706 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 98.84 புள்ளிகள் அல்லது 0.16% என உயர்ந்து 61,872 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 35.75 புள்ளிகள் அல்லது 0.20% உயர்ந்து 18,321 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,773 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,285 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.

பார்தி ஏர்டெல், ஐடிசி லிமிடெட், கோடக் மஹிந்திரா வங்கி, லார்சன் & டூப்ரோ, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.விப்ரோ லிமிடெட், டாடா மோட்டார்ஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.
Join our channel google news Youtube