ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு…! ஓய்வு பெற்ற நீதிபதி குழுவிற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு …!

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் ஓய்வு பெற்ற நீதிபதி குழுவிற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல், உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல் வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.அதைத்தொடர்ந்து  தேசிய பசுமைத்தீர்ப்பாயம் அமைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தருன் தலைமையில் அமைக்கப்பட 3 பேர் கொண்ட குழு செப்டம்பர் 22 ஆம் தேதி மாலை தூத்துக்குடி வந்தடைந்தனர்.

இதன் பின்னர்  செப்டம்பர் 23 ஆம் தேதி  ஓய்வு பெற்ற நீதிபதி தருன் தலைமையில் அமைக்கப்பட 3 பேர் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வை தொடங்கினார்கள்.இதன் பின்னர் ஸ்டெர்லைட் குறைகள் தொடர்பாக பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்பு  அரசு பாலிடெக்னிக்  கல்லூரியில் நடைபெற்றது. இதன் பின்னர் சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில் நீதிபதி தருன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய கூடுதல் கால அவகாசம்  கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதைவிசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் ஓய்வு பெற்ற நீதிபதி குழுவிற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.அதாவது  1 மாதம் கூடுதலாக கால நீட்டிப்பு வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால்  நவம்பர் 30 வரை ஓய்வு பெற்ற நீதிபதி அகர்வால் குழு ஆய்வு செய்ய அவகாசம் வழங்க்கப்பட்டுள்ளது.

Leave a Comment