பணிமனைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்-  போக்குவரத்து செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை வடபழனி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில், சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து  போக்குவரத்து செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் . சென்னையிலுள்ள 32 போக்குவரத்து பணிமனைகளில் 16 பணிமனைகளை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  வடபழனி பேருந்து பணிமனையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

தமிழக அரசு சார்பில் புதிய பேருந்துகள் வாங்கி வருகிறோம், 5000-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன என்று தெரிவித்தார்.