தடுப்பூசி வீணடிப்பதில் முதல் மூன்று இடத்தில் உள்ள மாநிலங்கள்…! – மத்திய சுகாதார அமைச்சகம்

ஜார்கண்ட், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தடுப்பூசியை வீணடிப்பதில் முதல் மூன்று இடத்தில் உள்ளது. 

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரையில், ஒரு கொரோனா தடுப்பூசி குப்பியை எடுத்துக் கொண்டால், அதனை பயன்படுத்தி 10 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும்.  ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் 10 பேருக்கும் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால், மீதமுள்ள மருந்துகள் அனைத்தும் பயனில்லாமல் போய்விடும். அந்த வகையில் அதிக அளவில் தடுப்பூசி சில மாநிலங்களில் வீணடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தடுப்பூசிகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக தான் வீணடிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பல மாநிலங்கள் அதிகளவு தடுப்பூசி வீணாக்குகின்றனர். நாடு முழுவதும் 6.3% தடுப்பூசிகளின் வீணடிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 37.3% தடுப்பூசிகளும் வீணடிக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. சத்தீஸ்கரில் 30.2% தடுப்பூசி வீணடிக்கப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகம் 15.5% தடுப்பூசிகளை வீணடித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் 10.8 சதவீதம் ,  மத்திய பிரதேசம் 10.7% தடுப்பூசிகளை வீணடித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஓட்டு போட முடியாமல் போனது மனசு வேதனையா இருக்கு -சூரி!

Soori  : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார். இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை…

30 mins ago

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா.!

Amla juice- நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்  பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின்…

33 mins ago

மக்களவை தேர்தல்! 50 சதவீதத்தைக் கடந்தது வாக்குப்பதிவு… எந்த தொகுதியில் அதிகம்?

Election2024: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று…

53 mins ago

உங்க வீட்டுக்கு பெயிண்டிங் பண்ண போறீங்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Painting idea-ஓவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அது என்னவென்று இப்பதிவில் காண்போம். வண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் எண்ணங்களும் பிரதிபலிக்கும். ஆமாங்க.. நம் மனநிலையை…

54 mins ago

கிரிக்கெட் கேரியரில் சிறந்த தருணம் அது தான் !! தோனியை புகழ்ந்த ராகுல் !

ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக…

1 hour ago

அட்ராசக்க! 5,500Mah பேட்டரி..50MP கேமரா..அசத்தல் அம்சங்களுடன் வருகிறது vivo V30e 5G!

Vivo V30e  : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e…

1 hour ago