மாநிலங்களிடம் 3.14 கோடிக்கும் அதிகமான டோஸ் உள்ளது- மத்திய அரசு..!

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3.14 கோடிக்கும் அதிகமான டோஸ் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3.14 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 48.78 கோடிக்கும் அதிகமான டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 68,57,590 டோஸ் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவற்றில், வீணான டோஸ் உட்பட மொத்தம் 45,82,60,052 டோஸ் செலுத்தப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

author avatar
murugan