திமுகவின் கதைகளை தோண்டினால் ஸ்டாலின் பிரச்சத்திற்கே செல்ல முடியாது – தமிழிசை காட்டம்!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரு தொகுதி தவிர்த்து 38 தொகுதிகளில் நடைபெற்று முடிந்தாலும், இடைத்தேர்தல்களுக்கான பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தற்போது அறவன்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் அனைத்து கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை பிரச்சாரத்தின் போது திமுகவை கடுமையாக சாடி பேசினார். அவர் பேசுகையில், ‘ஒரு தமிழரை பிரதமர் ஆக்காமல் தடுத்தது திமுகதான். எனவும், திமுகவின் கதைகளை தோண்டினால் ஸ்டாலினால் திண்ணை பிரச்சாரம் கூட செய்ய முடியாது’ என கடுமையாக சாடினார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment