இது ஸ்டாலினின் குழிபறிக்கும் செயல்! தெலுங்கானா முதல்வர் சந்திப்பு குறித்து ராஜேந்திர பாலாஜி கடும் விமர்சனம்!

இன்று தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். திமுக காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருக்கும் வேளையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையும் விமர்சனத்திற்கும் உள்ளாகி உள்ளது.

அதனை அதிமுக தமிழக அமைச்சரவையில் இருக்கும் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்துகொண்டு ராகுல் தான் அடுத்த பிரதமர் என கூறிக்கொண்டு தெலுங்கானா முதல்வருடனான சந்திப்பு,காங்கிரசிற்கு குழிபறிக்கும் செயல் என கூறியுள்ளார். ‘

மேலும், ‘ ஸ்டாலின் 4 அணி அல்ல 5வது அணி அமைந்தாலும் அவர் அந்தஅணியுடன் பேச்சு வார்த்தை நடத்துவார் எனகடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினை கேரளா முதல்வர் பிரனாயி விஜயன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment