தமிழக முதல்வராக ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்க வேண்டும்- ஆந்திர முதலைமச்சர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி- ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.அதன்படி இன்று  முதலமைச்சராக பதவி ஏற்றார் ஜெகன்மோகன் ரெட்டி.பதவியேற்கும் விழாவில்  திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

பதவியேற்ற பின்னர் ஆந்திர முதலைமச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.அப்போது அவர் கூறுகையில், கடவுள் ஆசிர்வாதத்தில் தமிழக முதல்வராக ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment