கொளத்தூர் தொகுதியில் பல்வேறு உதவிகளை வழங்கிய ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு உதவிகளை வழங்கிய ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு உதவிகளை வழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

கொரோனா வைரஸால் இந்தியாவில் 2000-க்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும்  மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்  பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு தமிழகம் வந்தவர்கள் தமிழகத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொளத்தூர் தொகுதியிலுள்ள தூய்மைப் பணியாளர்கள், வெளிமாநிலத்தவர், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, உணவு, உணவுப்பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள், நிதியுதவிகளை வழங்கினார் அந்த தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினரும் ,திமுக தலைவருமான ஸ்டாலின். 

Join our channel google news Youtube